×

நாமகிரிப்பேட்டை அருகே வீட்டில் நாட்டு துப்பாக்கி பதுக்கிய விவசாயி கைது

நாமகிரிப்பேட்டை, ஜன. 31: நாமகிரிப்பேட்டை அருகே வீட்டில் கள்ளத்துப்பாக்கி பதுக்கி வைத்திருந்த விவசாயியை கைது செய்த ஆயில்பட்டி போலீசார், 2 துப்பாக்கிகளை பறிமுதல் செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை அடுத்த நாரைக்கிணறு புதிய மோடடூர் பகுதியை சேர்ந்த அரபுலி மகன் முத்து (41). இவர் மலைவாழ் சமூகத்தை விவசாயி ஆவார். இவர் வீட்டில் அனுமதியின்றி கள்ளத்துப்பாக்கி வைத்திருப்பதாக ராசிபுரம் டிஎஸ்பி விஜயராகவனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து டிஎஸ்பி விஜயராகவன், ஆயில்பட்டி போலீசார், முத்து வீட்டில் நேற்று இரவு 7 மணியளவில் திடீர் சோதனை நடத்தினார். அப்போது அவர் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 2 நாட்டு துப்பாக்கிகள் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து துப்பாக்கிகளை பறிமுதல் செய்த போலீசார், கள்ளத்துப்பாக்கி வைத்திருந்தாக வழக்குபதிவு செய்து முத்துவை கைது செய்தனர். பின்னர் அவரை நாமக்கல் சிறையில் அடைத்தனர்.

Tags : home ,Namagiripet ,
× RELATED எளிய வீட்டு வைத்தியக் குறிப்புகள்